×

பருப்பு லாரி ஏரியில் கவிழ்ந்தது

தர்மபுரி, ஏப்.4: தர்மபுரி மாவட்டம், புலிகரை பகுதியில் தூத்துக்குடியிலிருந்து கர்நாடகா நோக்கி துவரம் பருப்பை ஏற்றிக்கொண்டு லாரி நேற்று வந்தது. லாரியை மேட்டூரை சேர்ந்த பாலமுருகன்(38) என்பவர் ஓட்டி சென்றார். நேற்று பகல் 2 மணியளவில் புலிகரை பகுதிக்கு வந்த போது நிலை தடுமாறிய லாரி ஏரிக்குள் விழுந்தது. மேலும், லாரி கவிழ்ந்ததில், லாரியில் இருந்த பருப்பு மூட்டைகள் பிரிந்து பருப்பு அனைத்தும் ஏரிக்குள் சிதறியது. இவ்விபத்தில் லாரி டிரைவர் பாலமுருகன் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். இது குறித்து தகவலறிந்த மதிகோன்பாளையம் போலீசார் கிரேன் உதவியுடன் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : lake ,larry ,
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!